இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சட்ட விரோதமாக படகின் செல்ல முயன்ற 7 பேர் கைது!

Tamil News large 2267989 1
Tamil News large 2267989 1

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தப்பிச்செல்ல முற்பட்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் படகின் மூலம் இந்தியாவிற்கு செல்ல முயற்சித்த 5 பேரும், அவர்களை அழைத்துச் சென்ற ஆட்கடத்தல்காரர்கள் இருவரும் மன்னார்– பேசாலை கடற்பரப்பில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் பேசாலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேசாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.