க.பொ.த சாதாரண தர பரீட்சை ஒத்திவைப்பு!

school 3
school 3

சாதாரண தரப் பரீட்சையை திட்டமிட்ட தினத்தில் ஆரம்பிக்க முடியாது எனக் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த பரீட்சையை நடத்துவதற்கான திகதி, சுமார் 6 வாரங்களுக்கு முன்னரே அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில், சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான சூழல் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2020ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடத்துவதற்கு கல்வி அமைச்சு ஏற்கனவே திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.