யாழ்ப்பாணம் – மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மணற்காடு பகுதியில், பாதிகப்பட்ட 145 குடும்பங்களை சேர்ந்த 515 நபர்கள், மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மணற்காடு ஜே – 418 கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதால் குறித்த மக்கள் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டு பிரதேச செயலகத்தால் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மக்கள் இடைத்தங்கல் முகாமாக தங்கவைக்கப்பட்டுள்ள குறித்த பாடசாலையும் வெள்ளத்தால் மூழ்கி காணப்படுகின்றது.
அத்தோடு வெள்ள நீர் தேங்கி காணப்படும் கணித்துண்டு ஒன்றிற்கு மூன்று லோட் என்ற அடிப்படையில் மணல் ஏற்றி நிறப்புவதற்கு பிரதேச செயலகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் 6 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ள அதே வேளை மீன்பிடி உபகரணங்களும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதும் மணற்காடு பகுதியில் அதிகமான மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது