யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 54163 பேர் பாதிப்பு!

Jaffna News 1st 626x380 1
Jaffna News 1st 626x380 1

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 16250 குடும்பங்களை சேர்ந்த 54163 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதுவரை இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை 6 நபர்கள் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ். மாவட்டத்தில் தற்போது 36 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 941 குடும்பங்களை சேர்ந்த 3393 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 55 வீடுகள் முழுமையாகவும், 2443 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.