இலங்கை – தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான தொடர் குறித்து வெளியான புதிய தகவல்!

ttt
ttt

இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணிக்கு மூன்று புதிய வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கட் சபை தெரிவிக்கின்றது.

இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆபிரிக்கா அணியினருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலமே குறித்த வீர்ரகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது பயிற்சிப் போட்டி நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.