ஆசிய பதினொருவர் அணியில் இந்திய வீரர்கள்?

kogli dhoni
kogli dhoni

ஆசிய பதினொருவர் அணி, உலக பதினொருவர் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) மார்ச் 18 மற்றும் 21ம் திகதிகளில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடக்கிறது.

இந்த போட்டியை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது.

இந்த போட்டிக்கான ஆசிய பதினொருவர் அணிக்காக அணிக்காக விளையாட இந்திய வீரர்கள் டோனி, விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர்குமார், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.