பலோன் டீ ஓர் விருது ஆறாவது முறையாக மெஸ்ஸியின் வசம்

messi 2019
messi 2019

கால்பந்தின் மிக உயரிய விருதான பலோன்-டீ-ஓர் (Ballon d’or) விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (02) பிரான்சில் கோலாகலமாக நடந்தேறியது. இதில் லயோனல் மெஸ்ஸி ஆறாவது தடவையாக பலோன்-டீ-ஆர் விருதை தனதாக்கினார்.

இதற்கு முதல் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோர் 5 தடவைகள் இவ் விருதை பெற்றிருந்தனர். இதனை முறியடித்து லயோனல் மெஸ்ஸி ஆறாவது தடவையாக இவ்விருதினை பெற்றுள்ளார்.

மேலும் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையும் மெஸ்ஸிக்கு உண்டு. இவர் 2009, 2010, 2011, 2012, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இவ்விருதை பெற்றிருக்கிறார்.

இவ் விருது தனக்கு மட்டும் உரியதல்ல வெற்றிக்காக உழைத்த தன் சக வீரர்கள் ஒவ்வொருவருக்கும் உரியது என லயோனல் மெஸ்ஸி இதன் போது தெரிவித்திருந்தார்.