லங்கன் பிரீமியர் லீக் அடுத்த ஓகஸ்டில்

sammy silva
sammy silva

அடுத்த ஆண்டின் (2020) ஓகஸ்ட் மாதம் லங்கன் ப்ரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடர் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவரான ஷம்மி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்தரினை நியமனம் செய்யும் நிகழ்வின் போது இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ஷம்மி சில்வா லங்கன் ப்ரீமியர் லீக் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் என குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபை வருடாந்தம் நடாத்தும் உள்ளூர் ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் அணிகள் குறைக்கப்பட்டு நடாத்தப்படும் எனவும் ஷம்மி சில்வா தெரிவித்திருந்தார்.

அத்துடன் இலங்கையின் சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் அனைத்தும் இன்னும் விருத்தி செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.