இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு பணித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் ரிஷாப் பந்த் 71 ஓட்டங்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 70 ஓட்டங்களையும், கேதார் ஜாதவ் 40 ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஷெல்டன் கோட்ரெல் மற்றும் கீமோபோல்,அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார் .
288 ஓட்டங்களைவெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 47.5 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இழக்கினை அடைந்தது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஹெட்மையர் 139 ஓட்டங்களையும், ஷாய் ஹோப் 102 ஓட்டங்களையும், நிக்கலஸ் பூரான் 29 ஓட்டங்களையும், பெற்றுக்கொடுத்தனர்.
ஆட்டநாயகனாக ஹெட்மையர் தெரிவு செய்யப்பட்டார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
அடுத்த போட்டி எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளது.