உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இசான்ட் சர்மாவின் கையில் உபாதை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருக்கு மூன்று தையல்கள் இடப்பட்டுள்ளன. எனினும் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருக்கு அவர் தயாராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.