பிலான்டர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

philander
philander

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் அறிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டனர். 34 வயதாகும் இவர் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2-வது டெஸ்ட் அவரது சொந்த மைதானமான கேப் டவுனில் நடக்கிறது. சொந்த மைதானத்தில் விளையாடியதோடு கிரிக்கெட் முடித்துக் கொள்கிறார்.

பிலாண்டர் 60 டெஸ்ட் போட்டிகளில் 216 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். 30 ஒருநாள் போட்டியில் 41 விக்கெட்டும், 7 T20 போட்டியில் 4 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.