200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது மத்தியஸ்தர் என்ற பெருமையை இலங்கையின் முன்னாள் வீரர் ரஞ்சன் மடுகல்லே பெற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் போட்டியில் மத்தியஸ்தராக கடமையாற்றியதை அடுத்து, அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.