இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராகும் சௌரவ் கங்குலி

sourav ganguly
sourav ganguly

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) தலைவராவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் இது குறித்து பல நாளிதழ்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் பிரிஜேஷ் பட்டேல், சௌரவ் கங்குலி ஆகிய இருவரது பெயர்களையும் இரு வெவ்வேறு பிரிவினர் ஆதரித்து வஐரகின்றனர்.

இந்நிலையில் கங்குலிக்கு முன்னாள் BCCI தலைவர் அனுராக் தாக்கூர் ஆதரவு தெரிவிப்பதாகவும், பிரிஜேஷுக்கு BCCIஇன் இன்னொரு முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் ஆதரவு தெரிவிப்பதாகவும் செய்திகள் கூறுகிறது.

ஆனால் சௌரவ் கங்குலி BCCI தலைவர் பொறுப்புக்கும், பிரிஜேஷ் தாக்கூர் ஐ.பி.எல் (IPL) தலைவர் பொறுப்புக்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறும் வாட்சாப் தகவல்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி மேலும் கூறுகிறது.

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா புதிய BCCI செயலாளர் ஆகிறார் என்றும், அனுராக் தாக்கூரின் தம்பி அருண்சிங் துமால் புதிய BCCI பொருளாளர் ஆகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியிருப்பதாக கூறப்படுகிறது.