புரோ கபடி லீக் தொடர்- நாளை அரையிறுதிப் போட்டிகள்

semi final
semi final

இந்தியாவில் நடைபெற்று வருகின்ற புரோ கபடி லீக் (Pro Kabaddi League) இன் அரையிறுதிப்போட்டிகள் நாளை நடைபெறவுள்ளது.

அதன் நேற்றைய தினம் இடம்பெற்ற முதலாவது எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு புல்ஸ்-யுபி யோதா அணியை 48-45எனவும், இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் யு மும்பா – ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை 46-38 எனவும் தோற்கடித்திருந்தன.

இந்நிலையில் நாளைய தினம் நடைபெறவுள்ள முதலாவது அரையிறுத் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலுள்ள தபாங் டெல்லியுடனும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் யு மும்பா அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ள பெங்கால் வாரியர்ஸ் அணியுடனும் மோதவுள்ளது.

முதலாவது அரையிறுத் போட்டி
இரண்டாவது அரையிறுதிப் போட்டி

இவ்விரு அரையிறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் 19ம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சந்திக்கும். போட்டிகள் நாளை இலங்கை நேரப்படி பிற்பகல் 7.30 க்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த போட்டியில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.3 கோடி பரிசாக கிடைக்கும்.

இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ.1.8 கோடியும், 3வது, 4வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.90 லட்சமும், 5வது, 6வது இடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ.45 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

மேலும் தனிநபர் சிறப்பு பரிசுகளும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.