இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று(30) இடம்பெறவுள்ளது.
சவுதம்டனில் இன்று மாலை ஆரம்பமாக உள்ள குறித்த போட்டி பகல் இரவு ஆட்டமாக இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் சிலருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் அனுபவமற்ற வீரர்கள் அணியில் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இடம்பெறவுள்ளது.
அதேநேரம் கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடர், சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள் இன்றி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.