ஏலம் போகாத மலிங்க

malinga
malinga

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள அணிக்கு 100 பந்துகள் கொண்ட ”த ஹன்ட்” கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம், நேற்று (Oct.20) நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த வீரர்கள் ஏலத்தில் லசித் மாலிங்க உட்பட இலங்கையை சேர்ந்த 24 கிரிக்கெட் வீரர்கள் பங்கெடுத்த நிலையில், இலங்கையை சேர்ந்த ஒரு வீரர் கூட தொடரில் பங்கெடுக்கும் எட்டு அணிகளினாலும் ஏலத்தில் வாங்கப்படவில்லை.

அதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில், பாபர் அசாம், தென்னாபிரிக்க அணியின் றபாடா ஆகியோர் எந்த அணிகளினாலும் த ஹன்ரட் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்தில் வாங்கப்படவில்லை.

த ஹன்ட் கிரிக்கெட் தொடர், அடுத்த ஆண்டின் (2020) கோடை காலத்தில் இங்கிலாந்தின் பல்வேறு மைதானங்களில் இடம்பெறவுள்ளது.