பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் போராட்டத்தில்

shakib
shakib

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் சிலர் 11 அம்சங்கள் நிறைந்த கோரிக்கை ஒன்றினை சமர்ப்பித்து கோரிக்கை நிறைவேற்றப்படாத சந்தர்ப்பத்தில் கிரிக்கெட் போட்டிகள் எதிலும் ஆடப்போவதில்லை என குறிப்பிட்டிருக்கின்றனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களின் இந்த போராட்டத்தினால் அடுத்த மாதம் 03ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவிருக்கும் இந்திய – பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் இடம்பெறுவதிலும் சந்தேகம் உருவாகியிருக்கின்றது.

இது தொடர்பாக ஷஹிப் அல் ஹஷன் கருத்து தெரிவிக்கையில்;

“19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்திற்காக தயாராகின்றமையினால் இந்த போராட்டத்தில் இணைக்கவில்லை. அதோடு, அனைவரும் எங்களுடன் இருப்பது எங்களுக்கு தெரியும். எங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில், நாங்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு மீளப் போவதில்லை” என தெரிவித்துள்ளார்.

சகீப் அல் ஹசன், மஹமதுல்லா, முஷ்பிகுர் ரஹீம் மற்றும் தமிம் இக்பால் ஆகியோர் உள்ளடங்களாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் சிலர் அந்நாட்டு முதல்தரக் கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருக்கின்றனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களின் இந்த போராட்டத்தினால் அடுத்த மாதம் 03ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவிருக்கும் இந்திய – பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் இடம்பெறுவதிலும் சந்தேகம் உருவாகியிருக்கின்றது.

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் வைத்த 11 அம்ச கோரிக்கையில் வீரர்களின் சம்பள அதிகரிப்பு, வெளிநாட்டு தொடர்களில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களின் விளையாட அனுமதி வழங்கும் விடயம் என்பன பிரதானமாக அமைந்திருந்தது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்களின் இந்த போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி நிசாமுதின் சௌத்திரி இது தொடர்பிலான தீர்வு விரைவில் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.