9வது உலகக் கிண்ண ரக்பி போட்டிகள் ஆசியாவில் முதன் முறையாக ஜப்பானில் நடைபெற்று வருகிறது. செப்டெம்பர் மாதம் 2ம் திகதி ஆரம்பித்திருந்த நிலையில் இன்று தென்னாபிரிக்கா-இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறும் இறுதிப்போட்டியுடன் நிறைவடையவுள்ளது.
நேற்று நடைபெற்ற 3ம் இடத்திற்கான போட்டியில் நியூசிலாந்து – வேல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடாத்தியிருந்தது. இதில் நியூசிலாந்து அணி 40-17 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அத்துடன் தொடர்ச்சியா மூன்று தடவைகள் உலகக்கிண்ணத்தினை கைப்பற்றிய முதலாவது நாடு எனும் சாதனையை நழுவ விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,
இன்று நடைபெறவுள்ள ரக்பி உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி மூன்றாவது தடவையாகவும் இங்கிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் கிண்ணத்தினை கைப்பற்றும் முனைப்பிலுள்ளன.
இலங்கை நேரப்படி இன்று 2.30 மணியளவில் உலகக்கிண்ண போட்டி ஆரம்பமாகவுள்ளது.