கிளிநொச்சி மாவட்டத்தில் 90 சத வீத தபால்மூல வாக்குப்பதிவு!!

n 2
n 2

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தபால் மூல வாக்காளர்களின் 90 சத வீதமான வாக்குகள் நேற்றும் நேற்று முன் தினமும் பதிவாகியுள்ளதாக, கிளிநொச்சி தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

தபால்மூல வாக்கெடுப்பிற்காக 102 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டதாகவும், அதற்காக 200க்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே சுந்தரம் அருமைநாயகம் இதனைக் கூறியுள்ளார்.