பஞ்சாபை பந்தாடிய ராஜஸ்தான் அணி !

pic 2
pic 2

இந்தியன் பிரீமியர்லீக் . தொடரின் 50ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ஏழு விக்கெட்டுகளால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.

இந்தப் போட்டி, அபுதாபியில்நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மன்டீப் ஏமாற்றமளித்த போதும் ராகுல் மற்றும் கிரிஸ் கெயில் ஆகியோர் அதிரடியாக துடுப்பெடுத்தாடினர்.

இந்நிலையில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதையடுத்து 186 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 17.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மாத்திம் இழந்து வெற்றியிலக்கை அடைந்நது.

அணிசார்பாக, பென் ஸ்ரோக்ஸ் 50 ஓட்டங்களையும், சஞ்சு சம்சன் 48 ஓட்டங்களையும், சுமித் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றதோடு ரொபின் உத்தப்பா 30 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டியின் ஆட்டநாயகனாக பென் ஸ்ரோக்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.