கென்யாவில் வெள்ளம், நிலச்சரிவில் 34 பேர் பலி

kenya
kenya

கென்யாவில் ஏற்பட்ட மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

கென்யாவின் பல்வேறு கிராமங்களில் பெய்த மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் நிலச்சரிவில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.