போதைப்பொருட்களுடன் நீர்மூழ்கிக் கப்பல் சிறைபிடிப்பு

SPAIN
SPAIN

ஸ்பெயின் நாட்டில் உள்ள கடல்பகுதியில் சுமார் 3 டொன் கொக்கைன் போதைப்பொருட்களுடன் சென்ற நீர்மூழ்கி கப்பலை ஸ்பெயின் சட்ட அமுலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சிறை பிடித்துள்ளனர்.

20 மீட்டர் நீளமுடைய இந்நீர்மூழ்கி கப்பல் தென் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஈக்வடோர் நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.