ஜப்பானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதகுருவான போப் பிரான்சிஸ் ஜப்பான் மன்னர் நருஹிட்டோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதையடுத்து ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவையும் மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார்.
ஜப்பானிய மன்னரை சந்திப்பதற்கு முன்னதாக ஜப்பானில் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த ஹிரோஷிமா, நாகசாகி மக்களின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்னர் அமைதியை நிலைநாட்டுமாறு உலக மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.