சுவர் இடிந்த வீழ்ந்ததில் 17 பேர் பலி- 10 இலட்சம் இழப்பீடு

meddupalayam
meddupalayam

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில், மழையால் சுற்றுச்சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்தது. சுற்றுச்சுவர் விழுந்ததில், அதனை ஒட்டிய வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் 17 பேர் இறப்பிற்கு காரணமான சுற்றுச்சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு மேலும் தலா 10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதாகவும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படுவதாகவும் அந்தப் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.