மனைவிக்காக கணவரின் நெகிழ வைக்கும் செயற்பாடு!!

china
china

சீனாவைச் சேர்ந்த ஒருவர் தன் மனைவி அமர்வதற்கு இருக்கை ஒன்று கிடைக்கப் பெறாமையின் காரணமாக தரையில் அமர்ந்து தன் முதுகில் மனைவியை அமர வைத்து கொண்டார்.

தன் கர்ப்பிணி மனைவியை பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வேளை அங்கிருந்த நாற்காலிகள் அனைத்தும் நிரம்பிக் காணப்பட்டன. இதனால் கணவன், மனைவி இருவரும் மருத்துவரின் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்த தன் மனைவி சோர்வுற்றிருப்பதனை அறிந்து தரையில் அமர்ந்து தன் முதுகில் மனைவியை அமர வைத்து கொண்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.