இந்தியாவில் 24 வாரங்களுக்குட்பட்ட கருவை கலைக்கலாம் என சட்டம்

cover 1555915243
cover 1555915243

மருத்துவ ரீதியில் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டத்திருத்த சட்டமூலத்துக்கு இந்திய நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது.

1971ஆம்ஆண்டு முன்னர் இந்திய குற்றவியல் சட்டத்தின்படி கருக்கலைப்பு செய்வது குற்றமாக கருதப்பட்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது.

1971 ஆம் ஆண்டு மருத்துவரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தை இந்தியா கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் படி 20 வாரங்களாக இருக்கும் கருவை கலைக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது.

மருத்துவரீதியிலான காரணங்களுக்காகவும் கருவை சுமக்கும் பெண்ணின் உயிருக்கு ஆபத்தான சூழலிலும், கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் இருந்தாலோ, பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் ஏற்பட்ட கர்ப்பமாக இருந்தாலோ 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்யலாம் என இச்சட்டம் கூறுகிறது.

பதிவுபெற்ற வைத்தியர்கள் மட்டுமே கருக்கலைப்பு செய்யலாம். கர்பப்பையில் இருக்கும் கரு 12 வாரங்களுக்குள் இருந்தால் ஒரு மருத்துவரே முடிவு செய்து கருக்கலைப்பு செய்யலாம். அதுவே 12 முதல் 20 வாரங்களாக இருந்தால் இரண்டு மருத்துவர்கள் சேர்ந்தே முடிவு செய்ய முடியும்.

மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு செய்வதற்கான உச்சவரம்பை 24 வாரங்களாக உயர்த்தும் சட்டத்திருத்த சட்டமூலத்துக்கு நாடாளுமன்றம் அளித்துள்ளது.