ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 587 பேருக்கு கொரோனா!

202011071908391410 November 07 District wise full status of corona damage in SECVPF 1
202011071908391410 November 07 District wise full status of corona damage in SECVPF 1

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 587 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 258 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 28 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 93 சதவீதமாக இருந்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக நேற்று மட்டும் 5 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 1,614 ஆக இருந்து வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவால் 85 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.