குடியுரிமை சட்டத்திற்கு இந்திய குடியரசுத்தலைவர் ஒப்புதல்!!

ramnath kovinth
ramnath kovinth

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பு கூடாது என 124 வாக்குகளும், அனுப்ப வேண்டும் என 99 வாக்குகளும் வழங்கப்பட்டு 25 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தீர்மானம் மக்களவையில் தோல்வியடைந்தது.

மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின.

இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவரது ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசு தலைவர் ஒப்புதலை அடுத்து திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.