பிரித்தானியாவில் ஒக்ஸ்வர்ட் அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியை செலுத்திய பின் இரத்த உறைதலடைந்த 30 பேரில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
18 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதன் பின்னரே இவ்வாறு 30 பேருக்கு இரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.