நியூசிலாந்தின வெள்ளைத்தீவில் எரிமலை வெடித்த பகுதியில் இருந்து 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
வெள்ளைத் தீவில் கடந்த வெள்ளிக்கிழமை 47 சுற்றுலா பயணிகள் பூர்வையிட்டுக்கொண்டிருந்த வேளையில் திடீரென எரிமலை வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்திருந்தனர்.
21 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் தேடுதல் பணியில் ஈடுபட்ட இராணுவத்தினர் மேலும் 6 பேரின் சடலத்தினை கண்டெடுத்துள்ளனர்.