துருக்கி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 51 இலட்சத்து 6 ஆயிரத்து 862 ஆக உள்ளது.
ஒரே நாளில் 236 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 537 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 49.31 இலட்சத்தை கடந்துள்ளது. சுமார் 1.29 இலட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.