ஸிகா வைரஸ் தொற்றுறுதியானர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, கேரள மாநிலத்தில் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸிகா வைரஸ் தொற்றுறுதியான 14 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கேரள மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எச்சரிக்கை நிலையை அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கபபட்டுள்ளது.
திருவனந்தப்புரம் மாவட்டத்தில் தொற்று ஏற்பட்டுள்ளதை கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜோர்ஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.