போலியான மதுபானங்களை அருந்துவதாலும், அளவுக்கு அதிகமாக அருந்துவதாலும் சில சமயம் நம் உயிரை குடித்து விடுகிறது.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் லாகுவானா மாகாணத்தில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
நேற்று பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மது அருந்திய சுமார் 140 பேர் திடீரென மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போலியான மதுவை அருந்தியதால் இந்த மயக்கம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர். அத்துடன் குவேசான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
மேலும் இரண்டு பேர் கோமா நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.
இது தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.