மெக்காவை இடித்துவிட்டு இராமர் கோயில்- இந்தியர் கைது

indian arrest
indian arrest

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு கிடைத்து அங்கு இராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியதனைப் போன்று அடுத்து மெக்காவை இடித்துவிட்டு இராமர் கோவில் கட்டுவோம் என தெரிவித்த இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொழில் நிமிர்த்தமாக சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்த குறித்த நபர் இது குறித்த பதிவினை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இது குறித்த முறைப்பாடு சவுதி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்றதனையடுத்து அவரது தொழில் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.