தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் வெளியேற்றும் பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வரும் நிலையில், உக்ரேனியர்களை வெளியேற்ற காபூலுக்கு சென்ற உக்ரேனிய விமானம் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடையாளம் தெரியாத நபர்களால் விமானம் கடத்தப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானுக்கு பறந்து சென்றதாக உக்ரேனின் துணை வெளியுறவு அமைச்சர் எவ்ஜெனி யெனின் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.