புலம்பெயர் இந்தியர்களினால் ஆதரவு பேரணி

usa1
usa1

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் இந்தியர்கள் ஆதரவு பேரணி நடத்தினர்.

இச் சட்டத்திற்கெதிராக இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களில் எதிர்ப்புக்களும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகிறது. இவை வன்முறையாக மாறியமையினால் பலர் உயிரிழந்தனர்.

இது ஒருபுறமிருக்க, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், அந்த சட்டத்தில் உள்ள அம்சங்களை விளக்கியும் ஆளுங்கட்சியான பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் ஒன்றுகூடி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நியூயோர்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.