ஆப்கானிஸ்தானிய தலைநகர் காபூலில் இன்று (15) குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகப் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
உயிர்சேதம் மற்றும் காயபட்டவர்கள் தொடர்பான விபரங்கள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் இந்தக் குண்டுத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறியரக பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுதாக்குதலில் பல பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் இந்தத் தாக்குதல் தம்மாலேயே மேற்கொள்ளப்பட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் உரிமை கோரியிருந்தனர்.