ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
5.6 ரிக்டர் அளவில் நேற்று(புதன்கிழமை) இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
கடந்த 24 மணிநேரத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.
கடந்த செவ்வாய்க்கிழமை இப்பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 62 மைல்கள். இந்த நிலையில் மீண்டும் இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.