அமெரிக்க ஜனாதிபதி மீது மீண்டும் பாலியல் புகார்

usa 1
usa 1

2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது தொடங்கிய பாலியல் புகார் இன்று வரை தொடர்ந்த வண்ணமுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் களமிறங்க உள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் பொக்ஸ் செய்திப்பிரிவில் கடமையாற்றும் 39 வயதுடைய கர்ட்னி பிரையல் என்பவர் அமெிரிக்க ஜனாதிபதி டிரம்ப மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் நடத்திய அழகிப் போட்டியில் நடுவராக பணியாற்ற விரும்பினேன்.

இதற்காக அவருடன் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்த போது நீ ஒரு நாள் என் அலுவலகத்துக்கு வா, நாம் முத்தமிடலாம் என்று தெரிவித்தார்.

இதற்கு தான் மறுத்து விட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டேன்.

டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, அது தொடர்பான செய்திகளை சேகரித்து வெளியிடுவது எனக்கு கடினமாக அமைந்தது. தன்னைப் பற்றி பாலியல் புகார்கள் கூறிய பெண்களை அவர் பொய்யர்கள் என்று கூறியது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நான் அவர்களை நம்புகிறேன்” என தெரிவித்தார்.

இது தொடர்பாக டிரம்ப் தரப்பில் இருந்து எந்த கருத்தும் உடனடியாக வெளியிடவில்லை.