ஈரான் இராணுவ தளபதி இறுதி ஊர்வலத்தில் 35 பேர் பலி

iran 2
iran 2

அமெரிக்காவின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான்ஈராணுவ தளபதி காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.

ஈராக் தலைநகர் பக்தாத்தில் அமெரிக்க இராணுவம் நடத்திய வான்தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் நாட்டு இராணுவ தளபதியின் உடல் ஈராக்கில் இருந்து ஈரானுக்கு கொண்டுவரப்பட்டது.

சுலைமானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இலட்சக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் குவிந்தனர்.

இந்த இறுதி இறுதிச்சடங்கு மற்றும் இறுதி ஊர்வலத்தில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் பல்வேறு இடங்களில் நெரிசல் ஏற்பட்டது.

இந்த நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்து , 48 பேர் காயமடைந்தனர்.