நியாயத்துக்கு குரல் கொடுத்தார் தம்பி விஜய்- கமல் பாராட்டு!

vijay kamal
vijay kamal

நேற்று ‘பிகில்’ பட இசை வெளியீட்டு விழா இடம்பெற்றது, இதன்போது சுபஸ்ரீ மரணத்தின் கைது குறித்து ” பேனர் விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட வேண்டியவர்களை விட்டுவிட்டு பேனர் பிரிண்ட் செய்த நபரைக் கைது செய்கிறார்கள்” என்று விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாகக் கூறும்போது,

”யாரைக் கைது செய்ய வேண்டுமோ அவரை விட்டுவிட்டு, பேனர் பிரிண்ட் செய்த கடைக்காரரை கைது செய்கின்றனர் என்று நடிகர் விஜய் பேசியது சரியான நேரத்தில் சரியான மேடையில், நியாத்திற்காக குரல் கொடுத்த தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.