வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோர் 259ஆக அதிகரிப்பு

7 s
7 s

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 259ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 46 பேர் அந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று சீன அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அமெரிக்கா உட்பட்ட பல நாடுகள் சீனாவில் தங்கியிருந்தவர்களுக்கு புதிய எல்லை கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

சீனாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள ஹூபாய் மாகாணத்தில் வீதிகள் யாவும் வெறிச்சோடியுள்ளன. பொதுபோக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

வர்த்தக நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழுவின் தகவல்படி புதிதாக 2102 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமையை அடுத்து இதுவரை பல நாடுகளிலும் இருந்து சீனாவுக்கு 10 ஆயிரம் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 250 நாடுகளின் பிரஜைகள் சீனாவில் இருந்து வெளியேறியுள்ளனர்.