அமெரிக்கா மற்றும் தலிபான் கிளர்ச்சியாளர்கள் இடையே ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், கடந்த இரண்டு வாரங்களில் ஆப்கானில் உள்ள பாகிஸ்தானிய கிளர்ச்சியாளர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கான் காவல்துறையினர் மீது பாகிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த போதே அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் பாகிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என நம்பப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.