சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. வாஷிங்டனில் 10 பேரும், லொஸ் ஏஞ்சல்சில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளதால் அமெரிக்காவில் சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.