கொரோனாவை கட்டுப்படுத்த பெரும் பங்கு வகித்து வரும் ஜப்பான் மருந்து

8b7
8b7

FUJIFILM நிறுவனத்தின் துணை நிறுவனம் தயாரித்த ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Favipiravir என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 8968 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சீனாவில் தான் அதிகம் பேர் உயிரிழந்தனர். சீன சுகாதார அமைச்சகம் வெளியிட்ட கணக்குப்படி சீனாவில் இதுவரை 80,928, பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 3245 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிந்துள்ளனர். சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முற்றிலும் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 219265 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் சுமார் 3000 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று ஒரே நாளில் 475 பேர் பலியாகி உள்ளனர்,

ஐரோப்பா கண்டத்தில் உள்ள 27 நாடுகளும் கொரோனா பாதிப்பால் நிலைகுலைந்து போய் உள்ளன. உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கையை கொரோனா வைரஸ் முடக்கி உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொடர்பாக நாட்டு மக்களுக்கு இன்றிரவு பிரதமர் மோடி உரையாற்றுவதாக அறிவித்துள்ளார்.

உலகமே கொரோவிற்கு மருந்து கண்டுபிடிக்க கடுமையாக போராடி வருகிறது. சீனா மிகப்பெரியஅளவில் போராடி கொரோனா பரவுவதை தடுத்து நிறுத்தி உள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கண்ட நாடான சீனா 80 ஆயிரம் பேருக்கு பரவிய போதிலும் மரண விகிதம் 5 சதவீதம் என்ற அளவில் குறைத்துள்ளது. அதாவது 3245 பேர்தான்இதுவரை இறந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் சீனாவின் மருத்துவ முறையை சொல்கிறார்கள்.

FUJIFILM நிறுவனத்தின் துணை நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இம்மருந்தால் வுகானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 340 பேர் குணமடைந்திருப்பதாக சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொரானோவால் நுரையிரல் பாதிப்பு ஏற்பட்டவர்களில் Favipiravir மருந்து கொடுக்கப்பட்ட 90 சதவீதம் பேருக்கு உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.