ஸ்பெயின் மக்களுக்கு விதித்திருந்த கடுமையான கட்டுப்பாட்டினை தளர்த்தியுள்ளது அரசு!

download 3 6
download 3 6

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரும் பாதிப்படைந்த நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் மக்களுக்கு விதித்திருந்த கடுமையான கட்டுப்பாட்டினை தளர்த்தியுள்ளது.

ஒரு மாதத்திற்கும் மேலாக தமது வீடுகளில் முடக்கப்பட்டிருந்த மக்கள் ஓரளவு நடமாட தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை இன்று வரை 17 ஆயிரத்து 489 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, நிர்மாண மற்றும் உற்பத்தி தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான அனுமதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.