அமெரிக்காவை விட சிறப்பாக கொரோனாவை கையாள்கிறோம்: புடின்

i3 5 3
i3 5 3

கொரோனா வைரஸ் தொற்றை கையாள்வதில் அமெரிக்காவை விட சிறப்பாக செயல்பட்டு வருவதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் ரஷ்யாவில் இதுவரை 6,948 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா உள்பட பல நாடுகளை ஒப்பிடுகையில், ரஷ்யாவில் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘நாங்கள் கொரோனா வைரஸ் தொற்றை நம்பிக்கையுடனும், குறைந்த இழப்புகளுடனும் இந்த சூழ்நிலையிலிருந்து வெளியே வருகிறோம். ஆனால் அமெரிக்காவில் அது நடக்கவில்லை. ரஷ்ய அரசியலமைப்பு, கொரோனா நெருக்கடியை அமெரிக்காவை விட சிறப்பாக கையாண்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார் .