இலங்கை, மாலைத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளராக ஃபரிஸ் ஹதாத்-செர்வோஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஃபரிஸ் ஹதாத்-செர்வோஸ் இதற்கு முன்னர் நேபாளத்திற்கான உலக வங்கி முகாமையாளராக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை, மாலைத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர், குறித்த நாடுகளுக்கான உலக வங்கியின் ஆதரவை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்19 நெருக்கடியின் தாக்கங்களை நாடுகள் எதிர்த்துப் போராடுவதால், உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதும் மிக முக்கியமானது” என்று ஹதாத்-செர்வோஸ் கூறியுள்ளார்.