ஓகஸ்ட் 31வரை நீடித்தது தமிழகத்தில் ஊரடங்கு

566671
566671

தமிழகத்தில் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை ஊரடங்கை நீடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஓகஸ்ட் 1 முதல் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும் சென்னையில் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவருந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரூ.10ஆயிரத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஏனைய கோவில், மசூதி, தேவாலயங்களில் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் இரவு 7மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற என அனைத்து பொருட்களையும் ஒன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்கிற உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என்பதுடன், நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.