காஷ்மீர் பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்

pakistan 1
pakistan 1

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் அவ்வப்போது பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதுவரை பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய தரப்பில் சுமார் 25பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியஈராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதலில் அப்பகுதியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் பலியாகினர். மேலும், பயங்கரவாதிகளின் முகாம்களை பீரங்கி தாக்குதல் மூலம் அழித்துள்ளது.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்திற்குட்பட்ட கஸ்பா மற்றும் கிர்னி எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய இராணுவத்தின் கண்காணிப்பு முகாம்கள் மீது பாகிஸ்தான் படையினர் இன்று இன்று மாலை சுமார் 4 மணியிலிருந்து தாக்குதல் நடத்தினர்.

இந்திய வீரர்களும் இந்த தாக்குதலுக்கு உரிய முறையில் பதிலடி கொடுத்து வருவதாக ஜம்முவில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.